/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பாராட்டு
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 29, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில், சிறப்பாக செயல்பட்ட ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களுக்கு, பாராட்டு விழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, திரும்ப பெறும் பணிகளை சிறப்பாக செய்த, 11 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, கலெக்டர் தங்கவேல் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அப்போது, டி.ஆர்.ஓ., விமல்ராஜ், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, கலால் உதவி ஆணையர் முருகேசன், அரவக்குறிச்சி தாசில்தார் பிரபாகரன் உள்பட, பலர்
பங்கேற்றனர்.

