sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெருங்கும் தீபாவளி பண்டிகை: பாய்கள் தயாரிக்க கோரை புல் அறுவடை

/

நெருங்கும் தீபாவளி பண்டிகை: பாய்கள் தயாரிக்க கோரை புல் அறுவடை

நெருங்கும் தீபாவளி பண்டிகை: பாய்கள் தயாரிக்க கோரை புல் அறுவடை

நெருங்கும் தீபாவளி பண்டிகை: பாய்கள் தயாரிக்க கோரை புல் அறுவடை


ADDED : செப் 07, 2024 07:31 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், தீபாவளி பண்டிகைக்-காக, பாய்கள் தயாரிக்க கோரைப்புல் அறுவடை தொடங்கியுள்-ளது.

கரூர் மாவட்டத்தில், கோரைப்புல் சாகுபடியில் அதிகளவில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த சாகுபடி செலவு, அதிக நாட்களுக்கு அறுவடை, மழை இல்லாத காலத்திலும் தொடர்ந்து வளரும் தனித்தன்மை, நீண்ட கால வருமானம் உள்-ளிட்ட காரணங்களால் கோரைப்புல் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் அருகே நெரூர், செவிந்திப்பாளையம், ஒத்தக்கடை, என்.புதுார், பஞ்சாமாதேவி, மறவாப்பாளையம், கோயம்பள்ளி, புதுப்பாளையம், வாங்கல், திருமாக்கூடலுார், கடம்பங்குறிச்சி, அரங்கநாதன் பேட்டை உள்ளிட்ட காவிரியாற்று பகுதிகளில் கோரைப்புல் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் பாய்கள், வீட்டு அலங்கார பொருட்கள், கூடைகள், இருக்கைகள் ஆகி-யவை உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனால், கோரைப் புல்லுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதிகளில், கோரைப்புல் சாகுபடி அதிக பரப்பளவில் மேற்கொள்ளப்படுகி-றது.

இந்நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த, சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கோரைப்புல் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. கோரைப் புல்லை அறுவடை செய்து, காயவைத்துதான் பாய் உற்பத்தி உள்ளிட்ட அலங்கார பொருட் களை செய்ய முடியும்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

கரூர் மாவட்டத்தில் பணப்பயிர்களான நெல், கரும்பு, மஞ்சள், வாழையை அடுத்து கோரைப்புல் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்த கோரைப்புல்லை காய வைத்து, உடனடியாக பாய் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விட வேண்டும். இல்-லையென்றால், கோரைப்புல் நிறம் மாறி விடும். உடைந்து விழும். இதை கொண்டு பாய் தயாரிக்க முடியாது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும், ஒன்றரை மாதம் உள்ளதால், கோரைப்பாய்க்கு ஆர்டர் நிறைய வந்துள்ளது. 16 இன்ச் கொண்ட கோரைப்புல் ஒரு கட்டு, 1,500 ரூபாய் வரை விலை போனது. தற்போது, பாய் உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து 1,200 ரூபாய்தான் விலை கிடைக்கிறது.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us