/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு 30க்குள்வரி செலுத்த மக்களுக்கு வேண்டுகோள்
/
அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு 30க்குள்வரி செலுத்த மக்களுக்கு வேண்டுகோள்
அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு 30க்குள்வரி செலுத்த மக்களுக்கு வேண்டுகோள்
அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு 30க்குள்வரி செலுத்த மக்களுக்கு வேண்டுகோள்
ADDED : ஏப் 26, 2025 01:27 AM
அரவக்குறிச்சி:வரும், 30க்குள் வரி செலுத்தினால், 5 சதவீத வரி தள்ளுபடி என, பேரூராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகிறது.
அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரவக்குறிச்சி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. 50,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குடிநீர், தெரு விளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் பேரூராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரவக்குறிச்சி பேரூராட்சியில், 2025-26ம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம்,  தொழில் உரிமை கட்டணம் ஆகியவற்றை உடனடியாக பேரூராட்சியில், இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும்.
வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வசதியாக, வரித்தொகையை அலுவலகத்தில் வரும், 30க்குள் செலுத்தினால், 5 சதவீத வரிச்சலுகை அளிக்கப்படும் என, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி,  தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும், 30க்குள் செலுத்தி அனைவரும் வரிச்சலுகையை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.

