sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே அசாம் மாநில பெண் கொலை: வாலிபர் கைது

/

கரூர் அருகே அசாம் மாநில பெண் கொலை: வாலிபர் கைது

கரூர் அருகே அசாம் மாநில பெண் கொலை: வாலிபர் கைது

கரூர் அருகே அசாம் மாநில பெண் கொலை: வாலிபர் கைது


ADDED : ஜன 09, 2024 11:40 AM

Google News

ADDED : ஜன 09, 2024 11:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண்ணை கொலை செய்ததாக, வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

அசாம் மாநிலம், ரங்கப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுபோல் முர்மூ, 32; இவர், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே நிறுவனத்தில் பணிபுரியும், அசாம் மாநிலம் சசிபூர் பகுதியை சேர்ந்த சிந்தாமணி பரோ, 44, என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது. இந்நிலையில் சுபோல் முர்மூ, மீண்டும் சொந்த மாநிலம் செல்வதாக, சிந்தாமணி பரோவிடம் கூறியுள்ளார்.

ஆனால், சிந்தாமணி பரோ தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, நேற்று முன்தினம் இரவு, சுபோல் முர்மூவிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர், சிந்தாமணி பரோவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, சுபோல் முர்மூவை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட சிந்தாமணி பரோ, ஏற்கனவே திருமணமானவர். இரு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us