ADDED : டிச 01, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: இந்திய தடகள சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்-பாட்டு ஆணையம் சார்பில், கரூர் மாவட்ட அளவிலான, மாணவி-யர்களுக்கான தடகள போட்டி, நேற்று தான்தோன்றிமலை அரசு விளையாட்டு அரங்கில் நடந்தது.
அதில், 14, 16 வயதுக்குட்பட்ட மாணவியர்களுக்கு உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட, ஏழு போட்-டிகள் நடத்தப்பட்டன. கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட தடகள சங்க தலைவர் செல்வம், செயலாளர் பெருமாள், பொரு-ளாளர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

