sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அ.தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல்: 5 பேர் கைது

/

அ.தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல்: 5 பேர் கைது

அ.தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல்: 5 பேர் கைது

அ.தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல்: 5 பேர் கைது


ADDED : ஆக 21, 2024 02:23 AM

Google News

ADDED : ஆக 21, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் அருகே, அ.தி.மு.க., பிரமுகரை தாக்கிய வழக்கில், ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் அருகே, நிலம் அபகரிப்பு தொடர்பான புகாரில் முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் விஜயபாஸ்கர், அ.தி.மு.க., பிரமுகர் பிரவீன் ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த மாதம், 17 ல் கைது செய்தனர். தற்போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோர் நிபந்தனை ஜாமினில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, கரூர் தீரன் நகரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில் நாள்தோறும், இரண்டு முறை கையெழுத்து போட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த, 16 ல் கரூர்-கோவை சாலை, ரெட்டிப்பாளையம் பகுதியில் சென்ற பிரவீனை, காரில் வந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்கினர்.

பிரவீன் கொடுத்த புகாரின்படி, கரூர் டவுன் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரை சேர்ந்த மோகன சுந்தரம், 49; சிவா, 30; வெங்டேஷ்குமார், 20; கரூர் புகழூரை சேர்ந்த சசிக்குமார், 38; கலையரசன், 28; ஆகிய, ஐந்து பேர், பிரவீனை தாக்கியதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, ஐந்து பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us