/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிந்தலவாடியில் சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு
/
சிந்தலவாடியில் சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு
சிந்தலவாடியில் சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு
சிந்தலவாடியில் சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு
ADDED : நவ 10, 2024 01:24 AM
சிந்தலவாடியில் சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு
கிருஷ்ணராயபுரம், நவ. 10-
கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள, சிந்தலவாடி பஞ்சாயத்து ஊரக கட்டட வளாகத்தில், சட்டப்பணிகள் தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வழக்கறிஞர் காயத்திரி தலைமை வகித்தார். மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு, சட்டப்பணிகள் சம்பந்தமான, விழிப்புணர்வு குறித்து எடுத்து கூறப்பட்டது. சட்டப்பணிகள் அலுவலகம், கிருஷ்ணராயபுரம் நீதிமன்ற அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு பெண்களுக்கு தேவையான சட்டம் சம்பந்தமான ஆலோசனை மற்றும் தீர்வுகள் இலவசமாக வழங்கப்படும். எனவே, இதனை பெண்கள் பயன்படுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வட்டார சட்டப்பணி தன்னார்வலர்கள் சங்கீதா, கிருஷ்ணவேணி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர், பயிற்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
* இதுதவிர, குளித்தலை வட்டாரத்தில் உள்ள கோட்டமேடு ஆதி திராவிடர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திலும், சட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு நடந்தது. வழக்கறிஞர் பரமசிவம் தலைமை வகித்தார். சட்டப்பணிகள் தினம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.