/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விதை பந்து தயாரிப்பு குறித்த விழிப்புணர்வு
/
விதை பந்து தயாரிப்பு குறித்த விழிப்புணர்வு
ADDED : ஆக 17, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றம் துறை, கரூர் மாவட்ட தேசிய பசுமை சார்பில், குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
அதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விதைப்பந்து தயாரிப்பது குறித்தும், விதை பந்துகளை பயன்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, பள்ளி தலைமையாசிரியர் தன-லட்சுமி, சீடு அறக்கட்டளை பெண்கள் ஒருங்கிணைப்பாளர் அம்-சவள்ளி, கல்வி குழு மேலாண்மை கருத்தாளர் முருகேசன் உள்-பட, பலர் பங்கேற்றனர்.

