/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீயணைப்புத்துறை வீரர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தீயணைப்புத்துறை வீரர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தீயணைப்புத்துறை வீரர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தீயணைப்புத்துறை வீரர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 19, 2024 02:13 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலக வளாகத்தில், தீயணைப்-புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மழை காலங்களில் பயன்படுத்தும் உபகரணங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்ட சப்-க-லெக்டர் இளங்கோ தலைமை வகித்தார். மழை காலங்களில் வெள்ள தடுப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தாசில்தார் பிரபாகரன், மண்டல துணை தாசில்தார் சந்தானசெல்வம், கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் சுமித்திரா-தேவி, யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

