/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 30, 2026 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: அரவக்குறிச்சி தொகுதி வேட்டமங்கலம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, என்.புகழூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில், புகழூர் வருவாய்த்துறை சார்பில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி, வாக்களிப்-பது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாக்காளர்களை மாதிரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி வாக்காளர்கள் தாங்கள் பதிவு செய்த ஓட்டுகள், சரியானபடி சின்னத்திற்கு செல்கிறதா என பார்-வையிட்டனர்.

