/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே பூக்குழி திருவிழா ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
கரூர் அருகே பூக்குழி திருவிழா ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன்
கரூர் அருகே பூக்குழி திருவிழா ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன்
கரூர் அருகே பூக்குழி திருவிழா ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : டிச 02, 2024 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊரணி காளியம்மன் கோவிலில், ஐயப்ப சேவா சங்கம் அறக்கட்டளை மற்றும் ஐயப்ப பக்தர்கள் சார்பில் கடந்த, 26ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் பூக்குழி திருவிழா தொடங்கியது.
கடந்த, 28ல் ஊரணி காளி-யம்மன் கோவில் வளாகத்தில், திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, நெய்விளக்கு ஏற்றுதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூக்கு-ழியில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பயபக்தியுடன் இறங்கினர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.