/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோசமான தார் சாலை; விவசாயிகள் கடும் அவதி
/
மோசமான தார் சாலை; விவசாயிகள் கடும் அவதி
ADDED : மே 10, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நந்தன்கோட்டை பகுதியில் இருந்து, மகிளிப்பட்டி வாய்க்கால் கரை வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை வழியாக, விவசாயிகள் விளை நிலங்களில் இருந்து அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், வெற்றிலைகளை, வாகனங்களில் எடுத்து செல்கின்றனர். தற்போது சாலை பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலை குறுகிய நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையை செப்பனிட பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும்.