sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில் வாழைத்தார் ஏலம்

/

லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில் வாழைத்தார் ஏலம்

லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில் வாழைத்தார் ஏலம்

லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில் வாழைத்தார் ஏலம்


ADDED : மே 09, 2025 02:04 AM

Google News

ADDED : மே 09, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, வாழைக்காய் கமிஷன் மண்டிகளில் வாழைத்தார்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் வாழை மரங்களுக்கு சில இடங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாழைத்தார்கள் விலை சற்று உயர்ந்து வருகிறது.

நேற்று பூவன் வாழைத்தார், 350 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 250 ரூபாய்க்கு விற்பனையானது. வாழைத்தார்களை கரூர், திருச்சி மற்றும் உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர். வாழைத்தார்கள் ஒவ்வொன்றும் கடந்த வாரத்தை காட்டிலும், 50 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us