/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாழை இலை விலை உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்
/
வாழை இலை விலை உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்
ADDED : பிப் 11, 2025 07:25 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வாழை இலை விலை உயர்ந்து விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம்,
வீரவள்ளி, வீரகுமரன்பட்டி, கருப்-பத்துார், கள்ளப்பள்ளி, மகாதானபுரம் ஆகிய பகுதிகளில்
விவசா-யிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழை இலைகள் அறுக்கப்பட்டு சிறிய
கட்டுகளாக கட்டி கரூர், திருச்சி, குளித்-தலை ஆகிய பகுதிகளில் செயல்படும் ஹோட்டல்களுக்கு
விற்ப-னைக்கு அனுப்பப்படுகிறது.தற்போது முகூர்த்த சீசன் மற்றும் தைப்பூசம் விழா காரணமாக இலை விலை உயர்ந்துள்ளது. வாழை
இலை ஒன்று மூன்று ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த வாரம் வாழை இலை ஒன்று, இரண்டு ரூபாய்க்கு
விற்றது. ஒரு இலைக்கு ஒரு ரூபாய் உயர்ந்-துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

