sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கொத்தம்பாளையம் தடுப்பணையில் அதிகரித்து வரும் நீரால் குளிக்க தடை

/

கொத்தம்பாளையம் தடுப்பணையில் அதிகரித்து வரும் நீரால் குளிக்க தடை

கொத்தம்பாளையம் தடுப்பணையில் அதிகரித்து வரும் நீரால் குளிக்க தடை

கொத்தம்பாளையம் தடுப்பணையில் அதிகரித்து வரும் நீரால் குளிக்க தடை


ADDED : ஜூலை 27, 2025 01:34 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, கொத்தம்பாளையம் தடுப்பணையில், நீர்வரத்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணை, 90 அடியில் அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் மூலம், கரூர் மாவட்டத்தில், 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அமராவதி ஆற்றில், நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அரவக்குறிச்சி அருகே உள்ள, கொத்தம்பாளையம் தடுப்பணை நிரம்பி வருகிறது.

இதையடுத்து, கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், பொதுமக்கள் யாரும் தடுப்பணையில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us