ADDED : ஆக 09, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில் வரும், 15ல் சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில், தேசிய கொடியை ஏற்றி வைப்பது, கரூர் மாவட்டம் முழுவதும், கிளைகள் தோறும் தேசிய கொடி பேரணியை நடத்துவது உள்ளிட்ட, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், சாமிதுரை, உமாதேவி, பொருளாளர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், சக்திவேல் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

