/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
/
பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ADDED : நவ 15, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: பீஹாரில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பீஹார் மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, குளித்தலை ஒன்றியம் மற்றும் நகர செயலர் பொன் ரஞ்சித், ரம்யா கண்ணன் ஆகியோர் தலைமையில், குளித்தலை காந்தி சிலை முன் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

