sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கண்களை கட்டியபடி ஆசிரியர்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

/

கண்களை கட்டியபடி ஆசிரியர்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கண்களை கட்டியபடி ஆசிரியர்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கண்களை கட்டியபடி ஆசிரியர்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு


ADDED : ஜூன் 17, 2025 02:23 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கண்களை கட்டிக்கொண்டு மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:

கடந்த, 2012ம் ஆண்டுக்கு பின், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே வேலை என, அரசு அறிவித்தது. இதையடுத்து, 2012, 2013, 2017, 2019 மற்றும் 2022 ஆண்டுகளில் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. 2012ல், தேர்வில் தேர்ச்சி பெற்ற, 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. 2013 முதல் 2022 வரை நடந்த தகுதி தேர்வுகளில் இடைநிலை ஆசிரியர்கள் சிறந்த மதிப்பெண் பெற்று, பணி வாய்ப்புக்காக காத்திருந்தோம். ஒரு ஆசிரியர் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை.

இந்நிலையில், 2024ம் ஆண்டும் நியமனத் தேர்வு நடத்தப்பட்டது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற, இடைநிலை ஆசிரியர்கள், 25 ஆயிரம் பேர் தேர் வெழுதினோம். இதில், 23 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 2,768 பேருக்கு மட்டுமே பணி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளாக, 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடம் இருக்கும் நிலையில், ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை கூட நிரப்பவில்லை. ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் முதலில் பணிநியமனம் வழங்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us