/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் ரத்த தான முகாம்
/
பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் ரத்த தான முகாம்
ADDED : ஆக 23, 2025 01:46 AM
கரூர், பிரம்ம குமாரிகள் விஷ்வ மஹாதானி பவன் சார்பில், உலக சகோதரத்துவ நாள் மற்றும் ராஜயோகினி தாதி பிரகாஷ் மணிஜியின், 18வது நினைவு நாளையொட்டி, கரூர் கொங்கு திருமண மண்டபத்தில், பொறுப்பாளர் சாரதா தலைமையில் நேற்று ரத்த தான முகாம் நடந்தது.
காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை நடந்த முகாமில், 100க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் வழங்கினர். பிறகு, ரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ், டி-சர்ட், டிராவல் பேக் மற்றும் ஜூஸ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், டாக்டர்கள் வேலுசாமி, திருமலைசாமி, கருப்பையா, மாதவராவ், சரவணன் உள்பட, பலர் பங்கேற்றனர்.நாளை (24ல்) கரூர் மண்மங்கலம் பிரம்ம குமாரிகள் பவனில் காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. அதில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.