sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையோரத்தில் வீசப்படும் இளநீர் குடுவைகளால் கொசு உற்பத்தி அபாயம்

/

சாலையோரத்தில் வீசப்படும் இளநீர் குடுவைகளால் கொசு உற்பத்தி அபாயம்

சாலையோரத்தில் வீசப்படும் இளநீர் குடுவைகளால் கொசு உற்பத்தி அபாயம்

சாலையோரத்தில் வீசப்படும் இளநீர் குடுவைகளால் கொசு உற்பத்தி அபாயம்


ADDED : ஜூன் 03, 2025 01:08 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூரில் பயன்படுத்தப்பட்ட இளநீர் குடுவைகள் சாலையில் வீசப்படுவதால், அதில் காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் அதிகரித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட காரணங்களால், மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழை காலத்தில் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், மலேரியா, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும், கொசு உற்பத்தியை அதிகரிக்கும் இளநீர் குடுவைகளை சேமித்து வைக்க கூடாது என, தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், கரூர் நகரில் கோவை சாலை, உழவர் சந்தை சாலை, தின்னப்பா நகர் சாலை, வெங்கமேடு சாலை, மதுரை சாலை உள்ளிட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இளநீர் விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் இளநீரை அருந்திய பிறகு, குடுவைகளை அப்புறப்படுத்தாமல், அதே இடத்தில் வைத்து விட்டு வியாபாரிகள் சென்று விடுகின்றனர்.

தற்போது வீசப்பட்ட இளநீர்

குடுவைகளில், காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து

வருகிறது. எனவே, சாலையோரம்

வீசப்பட்ட இளநீர் குடுவைகளை அகற்ற

நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us