ADDED : ஜூன் 30, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூரில், மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தான்.
கரூர், சர்ச் கார்னர் மேற்கு பங்களா தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது மகன் ஆராஷ், 4; இவன், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, சுவிட்ச் பெட்-டியில் இருந்து கீழே தொங்கி கொண்டிருந்த, ஒயரை, ஆராஷ் தொட்டதால், மின்சாரம் தாக்கியுள்ளது. அதில், மயக்கம் அடைந்த ஆராஷ், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.