ADDED : ஜூலை 27, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே லாரி மோதி, வாலிபர் உயிரிழந்தார்.அரவக்குறிச்சி அருகே நம்பகவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார், 47.
இவர் அரவக்குறிச்சியில் இருந்து, ராஜபுரம் செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் அம்பிகை நகர் அருகே சென்ற போது, எதிர் திசையில் கடலுார் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த வினோத், 25, என்பவர் ஒட்டி வந்த கான்கிரீட் லாரி ரவிக்குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரவிக்குமாரை மீட்டு, அர-வக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரி-சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு-கின்றனர்.