sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உடைந்த நிலையில் வழிகாட்டி போர்டுகள் கரூரில் வாகன ஓட்டிகள் பெரும் அவதி

/

உடைந்த நிலையில் வழிகாட்டி போர்டுகள் கரூரில் வாகன ஓட்டிகள் பெரும் அவதி

உடைந்த நிலையில் வழிகாட்டி போர்டுகள் கரூரில் வாகன ஓட்டிகள் பெரும் அவதி

உடைந்த நிலையில் வழிகாட்டி போர்டுகள் கரூரில் வாகன ஓட்டிகள் பெரும் அவதி


ADDED : டிச 08, 2024 01:57 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 8-

கரூர் மாவட்டத்தில், பல இடங்களில், நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள, வழிகாட்டி போர்டுகள் உடைந்த நிலையில் உள்ளன. வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.

கரூர் நகரை சுற்றி மதுரை, சேலம், திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கோவை, ஈரோடு மாநில நெடுஞ்சாலைகளும் செல்கிறது. தொழில் வளம் மிகுந்த கரூருக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரி, கார், வேன் மற்றும் கன்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன. இதனால், கரூர் மாவட்டத்தில் பல இடங்களில், நெடுஞ்சாலை துறை சார்பில், பல்வேறு ஊர்களுக்கு செல்ல வசதியாக வழிகாட்டி போர்டுகள் வைக்கப்பட்டன. ஆனால், பல இடங்களில் வழிகாட்டி போர்டுகளில் இருந்த ஊர்களின் பெயர் அழிந்துள்ளது.

மேலும், பல போர்டுகள் உடைந்து, தொங்கிய நிலையில் உள்ளது. இதனால், கரூர் மாவட்டத்துக்கு வரும், வெளியூரை சேர்ந்த வாகன ஓட்டிகள், வழி தெரியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் மாவட்ட பகுதிகளில் உடைந்த நிலையில் உள்ள, வழிகாட்டி போர்டுகளை அகற்றி விட்டு, புதிய போர்டுகளை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us