/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒத்தமாந்துறை வழியாக தென்னிலைக்கு பஸ் தேவை
/
ஒத்தமாந்துறை வழியாக தென்னிலைக்கு பஸ் தேவை
ADDED : ஆக 24, 2025 01:30 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில் இருந்து ஒத்தமாந்துறை வழியாக தென்னிலை வரை அரசு பஸ் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து கரூர், மூலனுார், கன்னிவாடி, தாராபுரம், ஈசநத்தம், கோவிலுார் என பல்வேறு ஊர்களுக்கு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரவக்குறிச்சியில் இருந்து, ஒத்தமந்துறை வழியாக தென்னிலைக்கு டவுன் பஸ் வசதி இல்லை. அரவக்குறிச்சி, ஊத்துார், பாலமேடு, தண்ணீர் பந்தல், அரிக்கரன்வலசு, கல்லமடைபுதுார் பிரிவு, பள்ளப்பட்டி பிரிவு, ஒத்தமாந்துறை, சின்னதாராபுரம் வழியாக தென்னிலை வழித்தடத்தில் இதுவரை டவுன் பஸ் இயக்கப்படவில்லை.
இந்த வழித்தடத்தில், 3 கி.மீ.,க்கு ஒரு கிராமம் வீதம், 30 கி.மீ., தொலைவுள்ள இந்த வழித்தடத்தில் தினமும் வேலைக்கு செல்லும் பெயின்டர்கள், கொத்தனார் உள்ளிட்ட கூலி வேலை பார்ப்பவர்கள் மாணவ, மாணவியர் மத்திய, மாநில அரசு பணிகளுக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் டவுன் பஸ் வசதி இல்லாததால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தென்னிலை, சின்னதாராபுரம் மக்கள், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் வருவதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது.
இந்த வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கினால், பள்ளப்பட்டி பிரிவிலிருந்து அரவக்குறிச்சிக்கு சுற்றி வராமல் நேராக வந்துவிட முடியும். எனவே ஒத்தமாந்துறை வழியாக இரு மார்க்கத்திலும் டவுன் பஸ் வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

