/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண் குழந்தைகள் விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
பெண் குழந்தைகள் விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 12, 2024 07:38 AM
கரூர்: சாதனை புரிந்த பெண் குழந்தைகள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளி-யிட்ட அறிக்கை: தமிழ்நாடு சமூகநலத்துறை சார்பில், சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும், 13-18 வயதிற்குட்பட்ட பெண் குழந்-தைகளுக்கு, 2024---25ம் ஆண்டுக்கான தேசிய பெண் குழந்தை தினத்தில் விருது வழங்கப்படும். பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், வீரதீர செயல், ஓவியம், கவிதை, கட்டுரை மூலமாக விழிப்புணர்வு ஏற்ப-டுத்தி இருத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட-வர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார் எண், புகைப்-படம் ஆகியவற்றுடன் செய்த சாதனைகள் ஆகிய-வற்றுடன் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைத்து உரிய முன்மொழிவுகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து செப்.,30க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய சான்றை மாவட்ட சமூக-நல அலுவலகம், கரூர் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

