/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நுண்ணீர் பாசன திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
நுண்ணீர் பாசன திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜன 22, 2026 07:19 AM
கரூர்: நுண்ணீர் பாசன திட்டத்திற்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு, 1,500 ஹெக்டர் பரப்பில், 10.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியத்தில் ஒரு ஹெக்டருக்கு நுண்ணீர்பா-சனம் அமைக்க, ஜி.எஸ்.டி., வரியையும் சேர்த்து, 1.35 லட்சம் ரூபாய், மற்ற விவசாயிக-ளுக்கு (75 சதவீத மானியத்தில்) 1.05 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை பயிர்களுக்கு சிறு விவசாயிகள், 5 ஏக்கர் வரை-யிலும், குறு விவசாயிகள், 2.50 ஏக்கர் வரை-யிலும், 100 சதவீத மானியம், நுண்ணீர் பாசனம் அமைக்க வழங்கப்படும். மற்ற விவசாயிகள், 75 சதவீத மானியத்தில், 12.5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்து கொள்ளலாம். பயிர்களின் இடைவெளிக்கு ஏற்றாற்போல் மானியத் தொகை மாறுபடும். சொட்டு நீர் பாசனம் அமைத்து, 7 ஆண்டு நிறைவுற்று இருந்தால் புதியதாக மீண்டும் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொள்ளலாம். tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

