ADDED : மே 10, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், புகழூர் காகித ஆலை எல்.பி.எப்., தொழிற்சங்கம் சார்பில், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே, தெருமுனை விளக்க பிரசார கூட்டம், பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் நேற்று நடந்தது.
அதில், தொழிலாளர், விவசாயிகளின் விரோத சட்டங்களை எதிர்த்து வரும், 20ல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வது குறித்து நிர்வாகிகள் விளக்கம் அளித்து பேசினர்.
கூட்டத்தில், மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவர் ஜீவானந்தம், தொழிற்சங்க நிர்வாகிகள் அண்ணாவேலு, சுடர்வளவன் உள்பட, பலர் பங்கேற்றனர்.