தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தீபாவளிக்காக கூலித்தொழிலாளர்களுக்கு சுயஉதவிகுழு கடன் உதவி கிடைக்குமா?

தீபாவளிக்காக கூலித்தொழிலாளர்களுக்கு சுயஉதவிகுழு கடன் உதவி கிடைக்குமா?

தீபாவளிக்காக கூலித்தொழிலாளர்களுக்கு சுயஉதவிகுழு கடன் உதவி கிடைக்குமா?


ADDED : செப் 26, 2024 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2024 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர்-, கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர்

கூலித்தொழிலாளர்கள். தற்-போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தொழிலாளர்கள் கடும் உழைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தீபாவளி செலவுக்கு போதிய அளவு வருமானம் இருப்பதில்லை.

தினக்கூலி தொழிலாளர்களுக்கு போனஸ் கிடையாது. தீபாவளி செலவை சமாளிக்க விவசாய கூலி தொழிலாளர்கள் கந்து வட்டிக்-காரர்களை அணுக வேண்டிய நிலை உள்ளது.கந்துவட்டி கும்பல் ரன் வட்டி, மீட்டர் வட்டி, வார வட்டி என இந்த கூலி தொழிலாளர்களை கசக்கி பிழிகின்றனர். இதில் சிக்கும் கூலி தொழிலாளர்கள் அவர்களுக்கு அடிமையாகும் அவ-லநிலை

ஏற்படுகிறது. ஆண்டு முழுவதும் உழைத்து பெறும் பணத்தை கந்துவட்டி கும்-பலுக்கே அளிக்கும் நிலை ஏற்படுகிறது. இது போன்ற சூழ் நிலையை தவிர்க்க, தீபாவளி, போன்ற முக்-கிய பண்டிகை காலங்களில் கூட்டுறவு வங்கிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு கடன் வழங்கினால் கூலி

தொழிலாளர்கள் கடனை சிரமம் இன்றி அடைக்க முடியும். கந்து வட்டி கும்பலிடம் இருந்து தப்ப முடியுமென கூலி தொழி-லாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us