sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தீபாவளிக்காக கூலித்தொழிலாளர்களுக்கு சுயஉதவிகுழு கடன் உதவி கிடைக்குமா?

/

தீபாவளிக்காக கூலித்தொழிலாளர்களுக்கு சுயஉதவிகுழு கடன் உதவி கிடைக்குமா?

தீபாவளிக்காக கூலித்தொழிலாளர்களுக்கு சுயஉதவிகுழு கடன் உதவி கிடைக்குமா?

தீபாவளிக்காக கூலித்தொழிலாளர்களுக்கு சுயஉதவிகுழு கடன் உதவி கிடைக்குமா?


ADDED : செப் 26, 2024 03:18 AM

Google News

ADDED : செப் 26, 2024 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீபாவளிக்காக கூலித்தொழிலாளர்களுக்குசுயஉதவிகுழு கடன் உதவி கிடைக்குமா?

கரூர், செப். 26--கரூர்-, கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தொழிலாளர்கள் கடும் உழைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தீபாவளி செலவுக்கு போதிய அளவு வருமானம் இருப்பதில்லை. தினக்கூலி தொழிலாளர்களுக்கு போனஸ் கிடையாது. தீபாவளி செலவை சமாளிக்க விவசாய கூலி தொழிலாளர்கள் கந்து வட்டிக்காரர்களை அணுக வேண்டிய நிலை உள்ளது.கந்துவட்டி கும்பல் ரன் வட்டி, மீட்டர் வட்டி, வார வட்டி என இந்த கூலி தொழிலாளர்களை கசக்கி பிழிகின்றனர். இதில் சிக்கும் கூலி தொழிலாளர்கள் அவர்களுக்கு அடிமையாகும் அவலநிலை ஏற்படுகிறது. ஆண்டு முழுவதும் உழைத்து பெறும் பணத்தை கந்துவட்டி கும்பலுக்கே அளிக்கும் நிலை ஏற்படுகிறது. இது போன்ற சூழ் நிலையை தவிர்க்க, தீபாவளி, போன்ற முக்கிய பண்டிகை காலங்களில் கூட்டுறவு வங்கிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு கடன் வழங்கினால் கூலி தொழிலாளர்கள் கடனை சிரமம் இன்றி அடைக்க முடியும். கந்து வட்டி கும்பலிடம் இருந்து தப்ப முடியுமென கூலி தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us