/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தென்னிலை நான்கு சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்கலாமே
/
தென்னிலை நான்கு சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்கலாமே
தென்னிலை நான்கு சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்கலாமே
தென்னிலை நான்கு சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்கலாமே
ADDED : நவ 01, 2025 01:18 AM
அரவக்குறிச்சி, கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், தென்னிலை கடைவீதி-4 சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.
தென்னிலை மற்றும் சுற்றுவட்டாரத்தில், 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் இருந்து கூலித் தொழிலாளர்கள், உள்ளூர், வெளியூர் செல்லும் பயணிகள் என பல்வேறு தரப்பினர் பணி நிமித்தமாக தென்னிலை நான்கு வழி சந்திப்புக்கு வந்து செல்கின்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சந்திக்கும் இடமாக நான்கு சாலை அமைந்துள்ளது. இதனால் எப்போதும் இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, கடைவீதியில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது. இருப்பினும் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும். இதனால் எதிர்புறமாக வரக்கூடிய வாகனங்களை ஒழுங்குபடுத்தி செல்ல முடியும். எனவே 4 வழி சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

