/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கார், லாரி ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்கம் திறப்பு விழா
/
கார், லாரி ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்கம் திறப்பு விழா
கார், லாரி ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்கம் திறப்பு விழா
கார், லாரி ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்கம் திறப்பு விழா
ADDED : மார் 29, 2025 07:12 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகை மலையில் உள்ள அடிவாரத்தில் கருப்பசாமி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் நலச்சங்க திறப்பு விழா நடந்தது.
சங்க தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். முன்னதாக செயலாளர் ரகமத்துல்லா வரவேற்றார். துணைத்தலைவர் ஆறு-முகம், துணை செயலர் சண்முகம், பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், மூத்த நிர்வாகி நல்லையா ஆகியோர் நலச்சங்கத்தை திறந்து வைத்தனர்.
பின்னர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் பேசுகையில்,''தோகை ம-லையில் அதிகமான வாகனங்கள் உள்ளன. எனவே, மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் ஓட்டுனர்களும், உரிமையாளர்களும் பயணிக்க வேண்டும். மது அருந்தி வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். ஓட்டுனர்-களும், உரிமையாளர்களும் தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்-டங்களை, முழுமையாக பெற வேண்டும்,'' என்றார்.இந்நிகழ்ச்சியில் கவுரவ தலைவர் சக்திவேல் மற்றும் திருச்சி, கரூர், மணப்பாறை, குளித்தலை, பெட்டவாய்த்தலை, புத்தா-நத்தம் பகுதிகளில் உள்ள ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் நலச்சங்-கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.