/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனைவிக்கு அடி, உதை கணவர் மீது வழக்கு
/
மனைவிக்கு அடி, உதை கணவர் மீது வழக்கு
ADDED : ஏப் 13, 2025 04:44 AM
கரூர்: கரூரில், மனைவியிடம் பணம் கேட்டு அடித்த கணவர் மீது, மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரங்கநாதன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி, 34, லாரி டிரைவர். இவர் கடந்த, 2021ல், பிரியா, 29, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், ராஜீவ் காந்திக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. மேலும், மனைவி பிரியாவின் பெற்றோரிடம், ஐந்து லட்ச ரூபாய் கேட்டு ராஜீவ் காந்தி மிரட்டியுள்ளார். இதுகுறித்து, தட்டி கேட்ட மனைவி பிரி-யாவை, ராஜீவ் காந்தி அடித்து உதைத்துள்ளார்.இதற்கு, ராஜீவ் காந்தியின் தாய் சகாயமேரி உடந்தையாக இருந்-துள்ளார். இதனால், மகளிர் போலீசில் பிரியா புகார் செய்தார். இதையடுத்து, ராஜீவ் காந்தி, அவரது தாய் சகாயமேரி, 55, ஆகியோர் மீது, கரூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

