/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழிலாளியை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு
/
தொழிலாளியை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூலை 19, 2025 01:44 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த வீரியம்பாளையம் மேலத்மேட்டுத்தெருவை சேர்ந்தவர் குமர வேலு, 36, கூலித் தொழிலாளி. இவரது மாப்பிள்ளை வேல்முருகனுக்கும், மாணிக்கபுரத்தை சேர்ந்த ராஜலிங்கம், 70, என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வந்தது.
கடந்த 16ம் தேதி இரவு 8:00 மணியளவில் வீரியம்பாளையம் நால்ரோடு அருகே, வேலைக்கு சென்று விட்டு நடந்து வரும்போது, ராஜலிங்கம், 70, அவரது மகன் சந்திர சேகர், 40, உறவினர் பழனிசாமி, 40, ஆகிய மூவரும் சேர்ந்து, வேல்முருகனுக்கு ஆதரவாக இருக்கிறாயா என தகாத வார்த்தைகளால் பேசி, கைகளால் குமரவேலை அடித்தனர். காயமடைந்த குமரவேல் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து குமரவேலு கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் ராஜலிங்கம் உள்பட மூவர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

