ADDED : செப் 05, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:இரணியமங்கலம்
பஞ்., மேட்டுப்பட்டியை சேர்ந்த துரைசாமி, 60, கால்நடை மேய்ப்பவர்.
இவரை கடந்த 2ம் தேதி இரவு 7:00 மணி முதல் காணவில்லை. பல இடங்களில்
தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் இருந்து
வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மேட்டுப்பட்டியை
சேர்ந்த ஷாருக்கான். 33, என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில்,
துரைசாமி இறந்த நிலையில் மிதந்தார். புகாரின்படி, குளித்தலை தீயணைப்பு
துறை வீரர்கள் உதவியுடன், சடலத்தை மீட்டு குளித்தலை போலீசார் வழக்கு
பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
