sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குகை வழிபாதை பணி இழுபறி

/

குகை வழிபாதை பணி இழுபறி

குகை வழிபாதை பணி இழுபறி

குகை வழிபாதை பணி இழுபறி


ADDED : அக் 03, 2025 01:53 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் -திருச்சி சாலையில், குளித்தலை தெற்கு மணத்தட்டைக்கு செல்லும் வழியில் ரயில்வே கேட் உள்ளது. இதை கடந்து பள்ளி,கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் செல்கின்றனர். பல்வேறு, வாகனங்களிலும், இந்த வழியாக குளித்தலை நகரத்திற்கு வந்து செல்கின்றன. கேட் மூடும் போது பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.

இங்கு, குகை வழிப்பாதை கட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இப்பகுதியில், ரயில்வே சார்பில் குகை வழிப்பாதை அமைக்கு பணி தொடங்கியது. ஆனால், 5 ஆண்டுகளாக பணியில் இழுபறி நீடிக்கிறது. குகை வழிப்பாதை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஊற்று நீர் வருவதால், பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மண் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால், தண்டவாளத்தை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிவருகின்றனர். குகைவழிப்பாதை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியின் மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us