/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிமென்ட் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் தவிப்பு
/
சிமென்ட் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : அக் 06, 2024 02:58 AM
கரூர்: கரூர், அனுசுயா நகரில் சிமென்ட் சாலை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 11வது வார்ட்டில் கே.எம்.சி.,கால-னியில் உள்ள அனுசுயா நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்-ளன. இவ்வழியாக தினமும் வாகனங்கள் செல்கின்றன. அப்ப-குதியில் உள்ள சிமென்ட் சாலை, சேதமடைந்துள்ளது. இங்கு, குடிநீர் குழாய் சரி செய்யும் போதும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் போதும், சிமென்ட் சாலை சேதப்படுத்தப்-பட்டுள்ளது. குண்டும், குழியுமாக பல மாதங்களாக சரிசெய்யப்ப-டாமல் உள்ள இந்த சாலைகளில், வாகனங்களில் செல்வது சிரம-மாக இருக்கிறது.இந்த நகருக்கு செல்லும் சாலையில், 600 மீட்டருக்கு மட்டுமே சிமென்ட சாலை அமைக்கப்பட்டது. மீதுள்ள இடம் மண் சாலை-யாக இருந்து வருகிறது. மழை காலத்தில் தண்ணீர் தேங்கி சுகா-தார கேடு ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில், தினமும் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சேதமான சாலையை சீரமைக்க வேண்டும், மண் சாலையை சிமென்ட் சாலை மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியு-றுத்தி வருகின்றனர்.