ADDED : ஜூன் 24, 2026 04:29 AM
அ நிறம் | அளவு
ப.வேலுார்:நாமக்கல், ஜேடர்பாளையம்
அருகே கபிலக்குறிச்சியை சேர்ந்தவர் சக்திவேல், 42; சென்ட்ரிங்
தொழிலாளி. வேலைக்கு செல்லும் பகுதியில், 13 வயது சிறுமிக்கு பாலியல்
தொல்லை கொடுத்துள்ளார்.
இதை பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், ஜேடர்பாளையம் போலீசில்
புகாரளித்தனர். புகார்படி, ப.வேலுார் மகளிர் போலீசார், போக்சோ
சட்டத்தில் சக்திவேலை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
