/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருதுாரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
/
மருதுாரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
ADDED : செப் 19, 2024 07:26 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., கூட்டரங்கில் நேற்று குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் டவுன் பஞ்., தலைவர் சகுந்தலாசுப்பிரமணி தலைமையில் நடந்தது.செயல் அலுவலர் பானுஜெயராணி குழுவின் செயல்பாடுகள் குறித்து பேசினார். டவுன் பஞ்., இளநிலை உதவியாளர் சரவண-குமார், நிமிர்ந்து நில் துணிந்து சொல், இளந்தளிர் இல்லம், அகல்விளக்கு, பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு ஆகிய தலைப்பு-களில் உள்ளவை குறித்து தொகுத்து வழங்கினார்.
வி.ஏ.ஓ.,க்கள் பார்த்தீபன், விஜயா, கோவர்த்தனா, சுகாதார ஆய்-வாளர் ராஜா ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தை-களுக்கு
அரசு திட்டங்கள் குறித்து பேசினர். மருதுார் யூனியன் நடு-நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி பள்ளியில் சுற்-றுச்சுவர்
இல்லாததால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை; இதனால் பெற்றோர்கள் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க
முன்வ-ருவதில்லை. சுற்றுச்சுவர், முன்பகுதியில் கேட் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், சுகாதார மேற்பார்வை-யாளர் பாக்கியம், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.