ADDED : நவ 15, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் தினத்தையொட்டி, நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேர-ணியை, கலெக்டர் தங்கவேல் கொடியைசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து, திண்டுக்கல் சாலை, காளியப்ப கவுண்-டனுார் வழியாக சென்ற பேரணி, கரூர் அரசு கலைக்கல்லுாரியை அடைந்தது.
பேரணி தொடக்க விழாவில், கரூர் ஜே.எம்., -1 நீதிமன்ற நீதிபதி பரத்குமார், அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர்
பங்கேற்றனர்.

