ADDED : நவ 03, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள்
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 3---------
கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்யும் கல்லறை திருநாள் நவ., 2ல் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் முன்னோர்களின் கல்லறைக்கு, அவரது குடும்பத்தார் சென்று பூக்களால் அலங்கரித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் பிரார்த்தனை செய்வர்.
கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டதால், பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி, பி.பள்ளிப்பட்டி, தென்கரைக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கல்லறைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடி, முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர் துாவி பிரார்த்தனை நடத்தினர். தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது.