sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தண்ணீர் தொட்டி முன் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

/

தண்ணீர் தொட்டி முன் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

தண்ணீர் தொட்டி முன் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

தண்ணீர் தொட்டி முன் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் அவதி


ADDED : நவ 03, 2024 12:58 AM

Google News

ADDED : நவ 03, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்ணீர் தொட்டி முன் தேங்கிய

கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

தர்மபுரி, நவ. 3-

தர்மபுரி அருகே, தண்ணீர் தொட்டி முன் கழிவு நீர் தேங்கி இருப்பதால், தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள், அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.

தர்மபுரி, வட்டார வளர்ச்சி காலனியில், தர்மபுரி நகராட்சி சார்பில் கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இதில், இப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள், குடியிருப்போர் தண்ணீர் பிடித்து வந்தனர். அந்த இடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கட்சியின் கொடிகம்பம் அமைக்க கட்டடம் கட்டி விட்டனர். இதனால், தண்ணீர் தொட்டி இருக்கும் இடத்திற்கு போதிய இடைவெளி

இல்லாமல் போனது.

மேலும் சிலர், தொட்டியின் அருகிலேயே பிளாஸ்டிக் குப்பையை வீசிச் செல்வதால், தண்ணீர் வெளியேற முடியாமல் தொட்டி அருகிலேயே தேங்கியது. தேங்கிய தண்ணீர், கழிவு

நீராகி, கொசு உற்பத்தியாகும் இடமாக உள்ளது. இதனால் மக்கள் பல்வேறு பெரிதும் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி, நகராட்சி துாய்மை பணியாளர்கள், அதை உடனடியாக சுத்தம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us