/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வயலுார் பகுதியில் துாய்மை பணி தீவிரம்
/
வயலுார் பகுதியில் துாய்மை பணி தீவிரம்
ADDED : டிச 26, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், கோடங்கிப்பட்டி ஆகிய கிராமங்களில், சமீபத்தில் பெய்த மழையால் அதிகமான செடிகள் வளர்ந்தது. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இரவு நேரங்-களில் மக்கள் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். இதையடுத்து சாலையோர பகுதி, கோவில் சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் வளர்ந்த செடிகளை, பஞ்சாயத்தில் உள்ள நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு துாய்மை பணி செய்யப்பட்டது. தற்-போது துாய்மை பணியாளர்கள் கோடங்கிப்பட்டி கிராமத்தில், கோவில் செல்லும் சாலையோர இடங்களில் துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

