ADDED : ஜன 27, 2026 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்-தினம், மூர்த்திபாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேவல் சண்டை நடத்திய செல்லப்பன், 39; ரமேஷ், 47; ராமர், 25; நாகார்ஜூன், 36; ஆகிய நான்கு பேரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்-தனர். அவர்களிடமிருந்து உயிரிழந்த நிலையில் இரண்டு சேவல், 1,000 ரூபாய் பறிமுதல் செய்யப்-பட்டது.

