/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய வேளாண் சந்தையில் ரூ.78,000க்கு தேங்காய் ஏலம்
/
தேசிய வேளாண் சந்தையில் ரூ.78,000க்கு தேங்காய் ஏலம்
தேசிய வேளாண் சந்தையில் ரூ.78,000க்கு தேங்காய் ஏலம்
தேசிய வேளாண் சந்தையில் ரூ.78,000க்கு தேங்காய் ஏலம்
ADDED : அக் 02, 2024 02:06 AM
தேசிய வேளாண் சந்தையில்
ரூ.78,000க்கு தேங்காய் ஏலம்
ப.வேலுார், அக். 2--
ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடப்பது வழக்கம். இந்த சந்தைக்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
அதேபோல், உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். நேற்று நடந்த ஏலத்திற்கு, 5,870 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். கடந்த வாரம் நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 52.29 ரூபாய், குறைந்தபட்சம், 30.29 ரூபாய், சராசரியாக, 49.29 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 80,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 42.39 ரூபாய், குறைந்தபட்சம், 35.19 ரூபாய், சராசரியாக, 40 ரூபாய் என, மொத்தம், 78,000 ரூபாய்க்கு தேங்காய் விற்பனையானது.