ADDED : ஏப் 19, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார் : நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.
நேற்று நடந்த ஏலத்தில், 10.58 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.கடந்த வாரம் வியாழக்கிழமை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறையால் ஏலம் நடைபெறவில்லை. நேற்று நடந்த ஏலத்திற்கு, 11 ஆயிரத்துக்கு, 480 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 92.81 ரூபாய், குறைந்தபட்சமாக, 88.99 ரூபாய், சராசரியாக, 90.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 10 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

