/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி ரயில் முன்பதிவில்லா டிக்கெட் வழங்க எதிர்பார்ப்பு
/
கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி ரயில் முன்பதிவில்லா டிக்கெட் வழங்க எதிர்பார்ப்பு
கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி ரயில் முன்பதிவில்லா டிக்கெட் வழங்க எதிர்பார்ப்பு
கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி ரயில் முன்பதிவில்லா டிக்கெட் வழங்க எதிர்பார்ப்பு
ADDED : டிச 29, 2025 07:30 AM
கரூர்:கோவையில் இருந்து கரூர் வழியாக, மயிலாடுதுறைக்கு இயக்கப்படும், ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவில்லாத டிக்கெட்டு வழங்க வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த, 2003ம் ஆண்டு ஜன., 20 முதல் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு, ஜன்ச-தாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகி-றது. கடந்த, 22 ஆண்டுகளுக்கு பின், கடந்தாண்டு டிச., 27 முதல் கோவை-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ரயிலில், பெட்டிகள் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி, அதிக விசாலமான இடம் கொண்ட எல்.எச்.பி., பெட்டி-களில், லிங்க் ஹாப்மேன் புஷ் (எல்.எச்.பி.,) வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.இந்த ரயில் நாள்தோறும் காலை, 7:15 மணிக்கு கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்-பட்டு, 9:30 மணிக்கு கரூர் வந்து சேரும். அதேபோல், நாள்தோறும், மதியம், 3:10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு, மாலை, 6:40 மணிக்கு கரூர் வரும். சொகுசு இருக்கைககள் கொண்ட, இந்த ரயிலில் முன்பதிவு செய்தால் மட்டும் பயணம் செய்ய முடியும். முன்பதிவு செய்யாமல், இந்த ரயிலில் பயணம் செய்ய முடி-யாது. இதனால், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்-டங்களை சேர்ந்த, பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:
கோவை-மயிலாடுதுறை ஜன்சதாப்தி எக்ஸ்-பிரஸ் ரயிலில், முன்பதிவு செய்யும் பயணிகள் சென்றாலும், பெரும்பாலான இருக்கைகள் காலி-யாகவே உள்ளன. ஆனால், முன்பதிவு செய்-யாமல் இந்த ரயிலில் பயணம் செய்ய முடிய-வில்லை. அதிவேகத்தில் செல்லும் இந்த ரயில், 364 கிலோ மீட்டரில், எட்டு ஸ்டேஷன்களில், மட்டும் நின்று செல்கிறது. தமிழகத்தில், பஸ் கட்டணம் அதிகமாக உள்ள நிலையில், முன்ப-திவு செய்யாமல் டிக்கெட் வாங்கி பயணம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணம் செய்யும் நாளில், முன் பதிவு செய்யும் போது, சீட் இல்லை என்ற தகவல் இணையதளத்தில் உள்-ளது. ஆனால், இருக்கைகள் காலியாகவே உள்-ளன.
இதனால், முன்பதிவில்லாத டிக்கெட்டை வினி-யோகம் செய்துவிட்டு, ரயிலில் பரிசோதகர் மூலம் கூடுதலாக, 15 ரூபாய் முன்பதிவு கட்-டணம் வசூலிக்கலாம். அதன் மூலம், ரயில்வே துறைக்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும். அனைத்து தரப்பு பயணிகளுக்கும், இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

