sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

/

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி


ADDED : செப் 28, 2024 01:09 AM

Google News

ADDED : செப் 28, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடிந்து விழும் நிலையில்

மேல்நிலை குடிநீர் தொட்டி

கரூர், செப். 28-

கரூர்-திருச்சி சாலை மூலகாட்டனுாரில் கடந்த, 2006-07 ல் சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்தாக இருந்த போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதன் மூலம், மூலகாட்டனுார் பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்து கடந்த, 2011 ல் கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அதற்கு பிறகு, மேல் நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்தது. துாண்களில் உள்ள, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு, மேல்நிலை குடிநீர் தொட்டி மோசமாக உள்ளது.

கரூரில் இருந்து திருச்சிக்கு மூலகாட்டனுார் வழியாக நாள்தோறும் பஸ், லாரி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், எந்நேரமும் இடிந்து விழும் நிலையில், பிரதான சாலை யோரம் உள்ள, மேல்நிலை குடிநீர் தொட்டியால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சேதம் அடைந்த குடிநீர் தொட்டியை உடனடியாக, அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us