/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
3,914 மெ.டன் உரங்கள் கையிருப்பு குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
/
3,914 மெ.டன் உரங்கள் கையிருப்பு குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
3,914 மெ.டன் உரங்கள் கையிருப்பு குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
3,914 மெ.டன் உரங்கள் கையிருப்பு குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
ADDED : ஜூலை 30, 2025 01:47 AM
கரூர், மாவட்டத்தில், 3,914 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என, விவசாய குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில், போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் யூரியா, 1,115 மெட்ரிக் டன், டி.ஏ.பி., 401 மெட்ரிக் டன், பொட்டாஷ், 951 மெட்ரிக் டன், என்.பி.கே., 1,447 மெட்ரிக் டன் என மொத்தம், 3,914 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
சம்பா நெற்பயிர் சாகுபடிக்காக கோ 55, கோ 52 ஆர்.20, பி.பி.டி., உள்பட நெல் ரகங்கள், 180 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் கம்பு - கோ 10, சோளம் கோ 32 கோ 12 ஆகியவை, 13 மெட்ரிக் டன், பயறு வகை பயிர்கள் உளுந்து - வி.பி.என் 8, வி.பி.என் 10, கொள்ளு பையூர் - 2, தட்டைப்பயறு வி.பி.என்- 3 ஆகியவை, 36 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துக்கள் நிலக்கடலை கோ 1812, கோ-7, எள்- வி.ஆர்.ஐ.,-4, டிஎம்.வி- 7 ஆகியவை 5 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது.
மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு, 652.20 மி.மீ., நடப்பு ஆண்டு ஜூலை -வரை 161.32 மி.மீ, மழை பெய்துள்ளது. 32.68 மி.மீ, குறைவாக பெய்துள்ளது. மானாவாரி பயிர்களுக்கு ஆடிப்பட்டம் மிகவும் சிறந்த மாதமாகும். ஆடி மாதத்தில் பருவ மழையை எதிர்பார்த்து விதைகளை விதைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ,
வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம், வேளாண் பொறியியல் செயற்பொறியாளர் சுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.