ADDED : அக் 04, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் :கரூர் மாவட்ட சாமானிய மக்கள் கட்சி சார்பில், நகர செயலர் தென்னரசு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க., கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை கண்டித்தும், த.வெ.க., கட்சி தலைவர் விஜய் மீது வழக்குப்பதிந்து, கைது செய்யக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், பொதுச்செயலர் குணசேகரன், மாவட்ட செயலர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.