/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை, தோகைமலையில் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்
/
குளித்தலை, தோகைமலையில் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்
குளித்தலை, தோகைமலையில் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்
குளித்தலை, தோகைமலையில் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்
ADDED : அக் 07, 2024 03:38 AM
குளித்தலை: குளித்தலையில், நேற்று முன்தினம் இரவு கரூர் மாவட்ட காவல்துறை, குளித்தலை உட்கோட்டம், குளித்தலை காவல் நிலையம் சார்பில் சமுதாய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்-தது. குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமை வகித்து, குற்றங்களை தடுப்பது குறித்தும், மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
தொடர்ந்து இன்ஸ்பெக்டர் உதயகுமார், மகளிர் இன்ஸ்-பெக்டர் கலைவாணி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளி மீது உரிய நடவ-டிக்கை எடுக்கவும், கடை, வீடுகளுக்கு, 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும். பெண்கள் உரிமைகள் பாதுகாத்தல், குழந்-தைகள் திருமணம் தடுப்பு, வன்கொடுமை தடுப்பு குறித்தும் விரி-வாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், பைக், நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும்போது, 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஓட்டக் கூடாது. அப்படி விதியை மீறினால், வாகனத்தின் உரிமையாளர் அல்லது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
உயிரிழப்பு ஏற்-பட்டால் வாகனத்தின் உரிமையாளர் அல்லது சிறுவனின் பெற்-றோர்களுக்கு சிறை தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்-ளது. அதனால், சாலை விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும்
என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில், தோகைமலையை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

